தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றோர் கவனத்திற்கு – கூட்டுறவுத்துறையின் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் கடந்த ஆண்டு கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் இதில் முறைகேடுகள் நடைபெற்றதால் பல்வேறு நிபந்தனைகளை அரசு விதித்தது. அதன்படி நகைக்கடன் தள்ளுபடி தகுதியான நபர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனாலும் இதில் அரசு ஊழியர்கள் நகைக்கடன் தள்ளுபடி பெற்றிருப்பதால் கூட்டுறவுத்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தில் 5 சவரனுக்கு உட்பட் நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால் இதில் பல்வேறு வழிகளில் முறைகேடுகள் நடைபெற்று வந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. அதனால் இதனை தடுக்க சில நிபந்தனைகளை அரசு அறிவித்தது. அதன்படி தகுதியான நபர்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு ஆணை பிறப்பித்தது. இதையடுத்து தள்ளுபடிக்கு விண்ணப்பித்திருந்தவர்களின் விவரங்கள் பரிசீலினை மேற்கொள்ளப்பட்டது.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் 48 லட்ச பேர் நகைக்கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பித்தவர்களில் 14.50 லட்சம் பேர் மட்டுமே தள்ளுபடி பெற தகுதியானவர்கள் என்று பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி பிப்ரவரி மாத இறுதியில் தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் கூட்டுறவு தணிக்கை இயக்குனர் அலுவலக அதிகாரிகள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் அரசு ஊழியர்கள் என்பதை மறைத்து 37 ஆயிரத்து, 984 அரசு ஊழியர்கள் நகைக்கடன் தள்ளுபடி பெற்றுள்ளனர். அதன்படி இவர்களுக்கு மட்டும் ரூ.160 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழிற்கல்வி மாணவர்களுக்கு சீட் கிடையாது? பெற்றோர்கள் அதிருப்தி!
இதில் கோவை மாவட்டத்தில், 1,079 பேர் நகைக் கடன் தள்ளுபடி பெற்றுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரி கூறியதாவது, நகைக்கடன் தள்ளுபடி பல்வேறு அரசு துறை ஊழியர்கள், அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து வட்டியுடன் கடனை திரும்ப வசூலிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஊழியர்கள் செலுத்தவில்லையெனில் இது தொடர்பாக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். அதன்பின் அந்த ஊழியர்களின் துறை வாயிலாக வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.