தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – தலைவர்கள் முக்கிய கோரிக்கை!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி - தலைவர்கள் முக்கிய கோரிக்கை!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி - தலைவர்கள் முக்கிய கோரிக்கை!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – தலைவர்கள் முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் திமுக அரசு மிகவும் துரோகம் செய்து விட்டதாக பல கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

நகைக்கடன் தள்ளுபடி

திமுக ஆட்சி அமைத்ததும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கி இருப்போருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இந்த திட்டம் பலராலும் வரவேற்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சி அமைத்த சிறிது நாட்களிலேயே இந்த நகைக்கடன் தள்ளுபடி பற்றிய அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி நகைக்கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக கூறி தகுதியுடையவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் என்று பிரிக்கப்பட்டு குறிப்பிட்டோருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்து இருந்தது. இது பொதுமக்கள் மத்தியில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரத்தில் ஜன.4ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இது குறித்து தலைவர்கள் பலரும் அரசினை கண்டித்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம் நகைக்கடன் தள்ளுபடி மக்களை நம்ப வைத்து ஏமாற்ற செய்துள்ளதாக இருக்கிறது என்றும் இது அரசு மக்களுக்கு செய்துள்ள துரோகம் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 75 சதவீதம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்ற இந்த அறிவிப்பு ஏற்புடையது அல்ல என்று தெரிவித்துள்ளார். அதனால் அரசு அனைவரின் நகைக்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

ஜனவரி 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இவர் மட்டுமின்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் திமுக வாக்குறுதி அளித்தபடி இல்லாமல் 35 லட்சம் நகைக்கடன்களில் வெறும் 14.5 லட்சம் நகைக்கடன் மட்டுமே ஏற்புடையது என்று கூறியிருப்பது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார். இது மக்களுக்கு திமுக அரசு செய்த துரோகத்தை எடுத்துக் காட்டுகிறது. இவர்களை தொடர்ந்து பாஜக கட்சியின் அண்ணாமலை மற்றும் அமமுக கட்சியின் தினகரன் ஆகியோரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து இருக்கின்றனர். இது குறித்து தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!