தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – விபரங்கள் சேகரிப்பு பணிகள்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் ஐந்து பவுன் வரை அடமானம் வைக்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. அதன்படி ஐந்து பவுன் நகை கடன் வைத்திருப்பவர்கள் விவரங்கள் தற்போது சேகரிக்க தொடங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு நகைக்கடன்:
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு மக்கள் பயனடையும் வகையில் தொடர்ந்து பல்வேறு நல திட்டங்களை அறிவித்து வருகிறது. இதனால் தமிழக மக்கள் மிகுந்த பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி ரூ.4000, 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு என பல நிவாரணங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய (TNPSC) செயலாளர் நியமனம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!
தற்போது அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏழை மக்களின் நலன் கருதி, கூட்டுறவு வங்கிகள் ஐந்து பவுன் வரை அடமானம் வைக்கப்பட்ட நகை கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிக்கையிட்டார். தற்போது முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக இருக்கும் நிலையில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் ஐந்து பவுன் வரை அடமானம் வைக்கப்பட்ட நகை கடன்கள் விவரம், திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
மாநில தலைமை கூட்டுறவு வங்கி அறிவுறுத்தலின்படி மாவட்ட கூட்டுறவு வங்கிகள் இத்தகைய விவரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடந்த பிப்ரவரி 2021 வரை ஐந்து பவுன் வரை அடமானம் வைத்தவர்கள் விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். நகை கடன் தள்ளுபடிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
March varaikkum kudukkalame