தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றோர் கவனத்திற்கு – சான்றிதழ் விநியோகம்!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கி இருக்கும் ஏழை எளிய மக்களின் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், சாத்தான்குளம் ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கத்தில் தள்ளுபடி சான்று நேற்று (மார்ச் 30) வழங்கப்பட்டது.
நகைக்கடன் தள்ளுபடி:
கூட்டுறவு துறை சார்பில் 4,530 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் 180 தொடக்கநிலை ஊரக வளர்ச்சி வங்கிகளும் செயல்பட்டு வருகின்றனர். இந்த வங்கிகளில் குறைந்த வட்டிக்கு நகைக்கடன் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி 110 விதியின் கீழ் முதலமைச்சர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் படி ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wipro நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்கள் இதோ!
அதற்கான சில தகுதியின் கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த உத்தரவிடப்பட்டது. அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், பொது நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி உள்ள மற்றும் தகுதியற்றவர்களின் பட்டியல் அனைத்து மாவட்டங்களிலும் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்து தள்ளுபடி சான்று வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – புதிய நபர்களின் பெயரை இணைப்பது எப்படி?
இந்நிலையில் நேற்று (மார்ச் 30) சாத்தான்குளம் ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கத்தில் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டுள்ளது. தலைவர் ரெக்ஸ்அமிர்த ஜெயரெத்தினம் தலைமை வகித்து பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்று மற்றும் நகைகளை வழங்கினார். துணை தலைவர் அருள்ராஜ் முன்னிலை வகித்தார்.இதில் இயக்குனர் அந்தோணி ஆரோக்கியராஜ் செயலர் சோபிதராஜ், சங்க பணியகர்கள் முத்துக்குமார், அன்னபரிபூரணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.