சென்னை: ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.38,680-க்கு விற்பனை – நகை பிரியர்கள் அதிர்ச்சி!
நேற்று ஒரே நாளில் மட்டுமே சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. ரூ.480 அதிகரித்து ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்றைய தங்கத்தின் விலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. தங்கத்தின் விலை சரிவு என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிற அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. தங்கத்தின் விலை பல ஆயிரங்கள் அதிகரித்தாலும் நகை பிரியர்கள் மற்றும் தாய்மார்கள் அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்வதை தான் விரும்புகின்றனர். மேலும், அவர்கள் ஈட்டும் பணத்தில் பெரும் பகுதியை நகை வாங்குவதிலேயே முதலீடு செய்கின்றனர். தங்கத்தில் முதலீடு செய்வதை தான் பாதுகாப்பான திட்டம் என்றும், எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் எண்ணுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
மேலும், கடந்த ஜூன் 8 ஆம் தேதியில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரித்தபடியே தான் இருக்கிறது. அடகுவது கடந்த ஜூன் 8 ஆம் தேதியில் மட்டுமே சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.38,160 விற்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்பு, மேலும், ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.ரூ.38,360க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்பு, அடுத்தடுத்து தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. அக்ஷய திருதிக்கு பிறகே தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
வெண்பாவிற்காக மாயாண்டியை அடித்து நொறுக்கிய சாரதி – ட்விஸ்டுகளுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்!
நேற்று ஒரேடியாக ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு மட்டுமே ரூ. ரூ.60 அதிகரித்துள்ளது. அதாவது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.38,680-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை நேற்று ரூ.4,835-க்கு விற்பனையாகி வந்தது. தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய தங்கத்தின் விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே செல்வதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.