சென்னை: ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 சரிவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
கடந்த சில நாட்களாகவே சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே சென்றது. இந்நிலையில், ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. இதனால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை
நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பதை பொறுத்து தங்கத்தின் விலை கூடுவதும் குறைவதுமாய் இருந்து வருகிறது. மேலும், ஏற்றுமதி இறக்குமதி மாறுபாட்டினாலும் தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும், தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்தாலும் தாய்மார்கள் தங்கத்தில் தான் முதலீடு செய்ய விரும்புகின்றனர். மேலும், வங்கிகளில் பணம் சேமிப்பதை காட்டிலும் இதுபோல நகைகளில் முதலீடு செய்வதை தான் எதிர்காலத்திற்கு பாதுகாப்பான திட்டமாகவும், அதிக லாபம் தரும் திட்டமாகவும் எண்ணுகின்றனர்.
மேலும், கடந்த இரண்டு நாட்களாகவே தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே இருந்தது. ஆனால், இன்று தாய்மார்கள் எதிர்பார்த்தபடியே தங்கத்தின் விலை குறைந்துவிட்டது. அதாவது, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,440க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.4,805 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது மட்டுமல்லாமல் நேற்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.60.70க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ராதிகாவுடன் கோபி இருப்பதை பார்த்து விடும் பாக்கியா – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் அடுத்து வருபவை!
நேற்றைய தங்கத்தின் விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.38,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.35 குறைந்து ரூ.4,770 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து ரூ.60.00 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், தங்கத்தின் விலை அதிரடியாய் ரூ.280 குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்