சென்னையில் இன்று அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து வருவதால் நகைகள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
தங்கம் விலை:
நாடு முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று காரணத்தால் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கடைகள் , வணிக வளாகங்கள், மூடப்பட்டது. தொழில்கள் முடங்கியதால் முதலீட்டாளர்கள் கடும் பொருளாதார சரிவை சந்தித்தனர். இந்த நேரத்தில் ஏராளமானோர் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கம் விலை அதிகரித்தது. விலை உயர்வினால் நகைப்பிரியர்கள் தங்க நகைகளை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அவ்வப்போது தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த நேரத்தில் நிலவிய ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் காரணத்தால் உலக அளவில் பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. அதனால் அத்தியாவசிய பொருட்களில் விலை உயர்ந்தது. இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதிகரித்த விலைவாசியை தொடர்நது ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது. இதனால் சாமானிய மக்களும், நகை பிரியர்களும் நகை வாங்குவதில் பொருளாதார ரீதியான சிக்கலை எதிர்கொண்டனர் தங்கத்தின் விலையானது நாள் ஒன்றுக்கு 2 முறை மாற்றமடைகிறது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு – புதிய மாற்றம்! இதனை கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள்!
அந்த வகையில் இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் இன்று ரூ.38,480-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.4,810-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.68.50-க்கு விற்பனை ஆகிறது. இன்று அதிரடியாக உயர்ந்துள்ள தங்கம் விலையால் பெண்களும், நகைப்பிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.