சென்னை: தொடர்ந்து ஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் கவலை!
தமிழகத்தில் இன்று காலை நேர நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 40 உயர்ந்துள்ளது. தற்போது தங்கம் விலை அதிகரித்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியிலும், திருமணத்திற்கு நகைகள் வாங்குவோர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை:
ஆபரணத் தங்கத்தின் விலை அமெரிக்க டாலரின் மதிப்பை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாக பங்குச்சந்தையும் சரிவை சந்தித்தது. அதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி விட்டனர். அதனால் தற்போது உலகம் முழுவதும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக தங்கத்தை இறக்குமதி செய்யும் இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலை நாடுகளில் தங்கம் என்பது ஒரு வகையான முதலீடு ஆனால் இந்தியாவில் கலாச்சாரப்படி தங்கத்தால் ஆன அணிகலன்கள் அணிவது வழக்கமாக உள்ளது. அதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காண்பிப்பர். இந்தியாவில் தங்கத்தின் விலை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து நாள் ஒன்றுக்கு 2 முறை அதாவது காலையிலும், மாலையிலும் விலை மாறுபடுகிறது. அந்த வகையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. இதனால் பெண்கள் மற்றும் நகைப்பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – 10,649 பேருக்கு தொற்று உறுதி!
Exams Daily Mobile App Download
தற்போது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,440 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல ஒரு கிராம் தங்கம் ரூ. 5 உயர்ந்து ரூ.4,805 க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தை தொடர்ந்து இன்று வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து ரூ.60.90 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் சற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்