JEE, NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நீட் மாறும் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு ஜே.இ.இ ஆகிய தேர்வுகள் வரும் செப்டெம் மாதத்தில் நடைபெற உள்ளது இல்லை. அதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவசமாக பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் NEET, JEE தேர்வுகளுக்கான இலவச பயண ஏற்பாடுகள் செய்யப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு தொகுதி அல்லது மாவட்ட தலைமையகத்திலிருந்து தேர்வு மையத்திற்கு இலவச பயண ஏற்பாடுகள் அரசாங்கத்தால் வழங்கப்படும். இந்த வசதியைப் பெற ஆர்வமுள்ள மாணவர்கள் 181 என்ற எண்ணை அழைத்தோ அல்லது https/mapit.gov.in/covid-19 என்ற போர்ட்டல் மூலமாகவோ ஆகஸ்ட் 31 முதல் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் JEE மற்றும் NEET தேர்வுகளை நடத்துவதில், மாணவர்களின் பாதுகாப்புக்கும் எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தார். மாணவர்களின் எதிர்கால கல்விக்கு முக்கியத்துவம் அளித்தே தேர்வுகள் இப்போதே நடத்தப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது உட்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தேசிய தேர்வு முகமை (NTA) செப்டம்பர் 1-6 க்கு இடையில் JEE Mains தேர்வுகளையும் செப்டம்பர் 13 அன்று NEET தேர்வுகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்