ஜேஇஇ மெயின் தேர்வுகள் – ப்ளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ 2021 மெயின் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் அனுப்ப இன்று கடைசி நாள் ஆகும்.
ஜேஇஇ மெயின் தேர்வு:
இந்தியா முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி கல்லூரிகளில் இன்ஜினியரிங் பயில ஜேஇஇ தேர்வுகள் கட்டாயமாக்கபட்டுள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு நடக்கவுள்ள ஜேஇஇ தேர்வுகளில் சில மாற்றங்கள் குறித்த அறிவிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். இந்நிலையில் ஜேஇஇ தேர்வுகள் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நான்கு கட்டங்களாக நடைபெறும் எனவும், நான்கு கட்ட தேர்வுகளிலும் மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்றாற்போல் கலந்து கொள்ளலாம் எனவும் அதில் அதிக மதிப்பெண் பெற்ற தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி ஆவின் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!
இந்த தேர்வு கணினி வழியில் நடைபெறும். இந்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்போது இந்த தேர்வுக்கான கடைசி தேதி இன்று (ஜனவரி 16) ஆகும். நான்கு கட்டங்களாக நடைபெறும் தேர்வுகள் இந்தியாவிலேயே கடினமாக தேர்வு ஆகும்.
ஜனவரி 27 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – மாநில அமைச்சரவை ஒப்புதல்!!
இந்தியாவில் 20 ஐஐடி நிறுவனங்கள், 31 என்.ஐ.டி நிறுவனங்கள், 19 மத்திய மற்றும் மாநில அரசுகளில் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்க இந்த தேர்வுகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்