ஜே.இ.இ. தேர்வுகள் இனி 4 முறை நடத்தப்படும் – மத்திய அமைச்சர் அறிவிப்பு
ஜே.இ.இ. எனப்படும் பொது நுழைவுத்தேர்வு ஆனது இனி வருடத்திற்கு நான்கு முறை நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்து உள்ளார்.
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜே.இ.இ. தேர்வுகள்
நாடு முழுவதிலும் உள்ள இந்திய தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். இந்தத் தேர்வு முதன்மைத் தேர்வு, அட்வான்ஸ் தேர்வு என்று இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில முடியும்.
TN Police “FB
Group” Join Now
இந்த தேர்வுகள் தற்போது வரை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. அதில் பெறும் மதிப்பெண்களே மாணவர்களின் தலையெழுத்தினை நிர்ணயிக்கும். ஆனால் தற்போது அதில் ஒரு புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது தேர்வுகள் இனி வருடத்திற்கு நான்கு முறை இந்த தேர்வு நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அறிவிப்பு :
இந்த அறிவிப்பு குறித்து மத்திய கல்வி அமைச்சர், ” பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும். நான்கு தேர்வுகளிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாணவர்கள் பங்கேற்கலாம்” என்றவாறு தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறை ஆனது வரும் 2021ம் ஆண்டு முதல் நடைமுறை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |