ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள்- மத்திய அரசின் புதிய விதிமுறைகள்!!
ஜேஇஇ, நீட் தேர்வுகளில் மாற்றம் ஏதும் இல்லாமல் கடந்த ஆண்டு பாடத்திட்டமே கடைபிடிக்கப்படும். ஆனால் கடந்த ஆண்டை போல இல்லாமல் வினாக்களை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகளை மாணவர்களுக்கு இந்த ஆண்டு வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜேஇஇ, நீட் தேர்வு 2021:
ஜேஇஇ, நீட் போன்ற முக்கிய நுழைவுத்தேர்வுகளில் பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து, தற்போது மத்திய அமைச்சகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தேர்வுகள் நடைபெறும் எனவும் பாடத்திட்டங்களில் மாற்றம் ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மாணவர்களுக்கு வினாக்களை தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் – 91 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!!
இது குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவை, “2021-ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பாடத்திட்டமே கடைபிடிக்கப்படும். இருந்த போதிலும் மாணவர்களுக்கு கேட்கப்படும் 90 கேள்விகளில் (இயற்பியியல், வேதியியல், கணிதம் என 30 கேள்விகளில் ) 75 கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் காலிப்பணியிடங்கள் – நேர்காணல் தேர்வு!!
அதாவது இயற்பியல், வேதியியல், கணிதம் என உள்ள பிரிவுகளில் தலா 25 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். கடந்த ஆண்டு கேட்கப்பட்ட 75 வினாக்களுக்கும் கட்டாயமாக பதில் அளிக்க வேண்டியிருந்தது, இந்த ஆண்டு அந்த நடைமுறை இல்லாமல் வினாக்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை மத்திய அரசு வழங்கியுள்ளது.
ஜேஇஇ தேர்வுக்கான மதிப்பெண் தளர்வு:
மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ நுழைவு தேர்வு நடத்தப்படுகின்றது. இந்த தேர்வுக்கு 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மதிப்பெண் எடுக்க முடியாத சூழ்நிலையில் அந்த அறிவிப்பில் தளர்வுகள் அறிவிக்க மாணவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழக அரசுப்பள்ளிகளில் 400 ஆசிரியர் பணியிடங்கள் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
இதனை கருத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு அதில் தளர்வுகள் அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவை, “2020-21 ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது”, இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்