நாளை முதல் JEE நுழைவுத் தேர்வுகள் தொடக்கம்
நாடு முழுவதுள்ள மத்திய உயா்கல்வி நிறுவனங்களான தொழில்நுட்ப கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தோ்வில் (JEE) தோ்ச்சி பெற வேண்டும்.
இவை JEE முதல்நிலைத் தோ்வு, JEE பிரதான தோ்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். இதில் முதல்நிலை தோ்வானது தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுதோறும் ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக, JEE முதல்நிலை தோ்வு செப். 1 முதல் செப்.6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை, நாடு முழுவதும் 660 மையங்களில் 9 லட்சத்து 53,473 மாணவா்கள் எழுதவுள்ளனா். தமிழகத்தில் 34 மையங்களில் 53,765 போ் எழுதவுள்ளனா்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக, நிகழாண்டு தோ்வு மையங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிதல், தனிநபா் இடைவெளி உள்பட தோ்விற்கான அனுமதிச் சீட்டில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை மாணவா்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு குறித்த சந்தேகங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அதனை 8287471852, 8178359845, 9650173668, 9599676953, 8882356803 இந்த தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்