ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகள் ஜூலை 3ம் தேதி நடைபெறும் – ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு!!
நாடு முழுவதும் செயல்படும் மத்திய தொழில்நுட்ப பல்கலைகழக (ஐஐடி) மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஜேஇஇ அட்வான்ஸ்டு 2021 ஜூலை 3 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று அறிவித்து உள்ளார்.
ஜேஇஇ தேர்வுகள்:
கொரோனா பரவல் காரணமாக கல்வித்துறையில் ஏற்பட்ட சீர்திருத்தங்கள் காரணமாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் ஆன்லைன் வாயிலாகவே வெளியிடப்படுகிறது. முன்னதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள மாணவர்களே, ஐ.ஐ.டி.களில் சேருவதற்கான தகுதி மற்றும் ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேதி நாளை மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும்” என பதிவிட்டு இருந்தார்.
தமிழக மின்வாரியத்தில் 2,400 காலிப்பணியிடங்கள் – தேர்வு எப்போது??
அதன்படி இன்று சரியாக 6 மணிக்கு சமூக வலைதள நேரலையில் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி ஐ.ஐ.டி கரக்பூர் ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2021 தேர்வை நடத்தும் என்று கூறிய மத்திய கல்வி அமைச்சர் தேர்வு ஜூலை 3ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார். ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அட்வான்ஸ்டு தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுக்குத் தயாராக போதுமான நேரம் உள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஜனவரி 3வது வாரம் பள்ளிகளை திறக்க வாய்ப்பு – பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தகவல்!!
பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஜே.இ.இ-மெயின்ஸ் தேர்வு 2021 முதல் ஆண்டுக்கு நான்கு முறை, தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாணவர் நான்கு தேர்வுகளிலும் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என கூறிய அமைச்சர், அதில் மாணவர் பெற்ற அதிகப்படியான மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
தேர்வின் முதல் பாகம் பிப்ரவரி 23 முதல் 26 வரை நடைபெறும், அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அடுத்தடுத்த சுற்றுகள் நடைபெறும் என கூறப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்