ஊரடங்கு நீட்டிப்பு? பள்ளி, கல்லூரி & அரசு தேர்வுகள் ஒத்திவைப்பு!
டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்குடன் கூடிய புதிய கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள், அரசு & பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பல மாநிலங்களில் ஊரடங்குடன் கூடிய புதிய கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. அதனால் கடந்த ஆண்டை போலவே பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படுகிறது. ஹரியானா, பீகார், ஒடிசா, தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கர்நாடகா மாநிலத்தில் ஒரு நாளில் 34 ஆயிரம் புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு இரண்டு வார பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்திலும் இரவுநேர ஊரடங்குடன் கூடிய வார இறுதி ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!!
மஹாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இரவுநேர ஊரடங்குடன் கூடிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தவிர பல மாநிலங்களில் மாணவர்களுக்கான +2 பொதுத்தேர்வுகள், CBSE தேர்வுகள், JEE Main நுழைவுத்தேர்வு, NEET நுழைவுத்தேர்வு, UNIVERSITY தேர்வுகள், ICAI CA தேர்வுகள் உட்பட அனைத்து அரசு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
+2 பொதுத்தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு? மாநில அரசு அறிவிப்பு!!
தலைநகர் டெல்லியிலும் கொரோனா தொற்று தொடர்ந்து உச்சத்தை அடைந்து வருகிறது. அங்கு இறப்பு எண்ணிக்கையும் அதிகளவு பதிவு செய்யப்படுகிறது. இதனால் ஜவஹர்லால் நேரு & டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தவிர ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்லூரியிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதை ஊக்குவித்து வருகிறது.