கோவாக்சின் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஜப்பான் அனுமதி – பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்!
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பாரத் பயோடெக் நிறுவனத்தால் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. தற்போது பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்த இந்த ஜப்பான் நாடு அனுமதி அளித்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா வைரஸ் பல்வேறு வகையில் உருமாற்றம் அடைந்து பன் மடங்கு வேகமாக பரவி வருகிறது. அத்துடன் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி உள் நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. இதனை செலுத்திக்கொள்ள பல்வேறு நாடுகளில் அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!
இதனை தொடர்ந்து, அவசரக்காலத்தில் பயன்படுத்தி கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அத்துடன் இந்த தடுப்பூசியை செலுத்தி இருந்தால் வெளி நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது கொரோனாவின் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கோவாக்சின் தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்தி கொள்ளலாம் என்று ஜப்பான் நாடு அனுமதி அளித்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் இது தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயணிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்த ஜப்பான் அரசு அனுமதித்தது மிகவும் பெருமைக்குரியதாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தங்களுக்கு கிடைத்துள்ள மற்றொரு உலகளாவிய அங்கீகாரமாக தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த ஏப்ரல் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் மேட் இன் இந்தியா என்ற தடுப்பூசியை சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.