குடும்பத்தை பிரிக்க நினைக்கும் ஜனார்த்தனன் – வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் மீனா – ப்ரோமோ ரிலீஸ்!
முல்லைக்காக பல லட்சங்கள் செலவு செய்ததை மீனாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தற்போது ஜனார்த்தனன் மீனாவிற்காக குடும்பத்தினரிடம் பேச வரும்போது ஜனார்த்தனனை மீனா வீட்டை விட்டு வெளியே போக சொல்லும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லைக்கு செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சைக்கு 5 லட்சம் செலவு செய்ததை வைத்து தான் தற்போது வரைக்கும் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதாவது முல்லையால் இயற்கையாக கர்ப்பமாக முடியாது என்பதால் 5 லட்சம் செலவு செய்து குடும்பத்தினர்கள் செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை செய்தனர். ஆனால், முல்லைக்கு இந்த சிகிச்சை வெற்றியை கொடுக்கவில்லை
Exams Daily Mobile App Download
இந்த ஐந்து லட்சத்தை ரெடி செய்யவே குடும்பத்திலுள்ள அனைவருமே மிகவும் கஷ்டப் பட்டிருக்கிறார்கள். அதாவது தெரிந்தவர்கள் அனைவரிடமும் கடன் வாங்கி, வீடு கட்டும் பிளானையும் பாதியிலேயே நிறுத்தி என பல கஷ்டங்களை மேற்கொண்டனர். கடைசியில் முல்லைக்கு இந்த சிகிச்சை வெற்றி பெறாமல் போனதும் குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குடும்பத்தினருக்கு இவ்வளவு பெரிய கஷ்டத்தை கொடுத்து விட்டோமே எனவும், தன்னால் ஒரு குழந்தையை கூட கதிருக்கு பெற்றுக்கொடுக்க முடியவில்லை என முல்லையும் மிகவும் கஷ்டத்தில் இருந்தார்.
கோபிக்காக ராதிகாவிடம் கெஞ்சும் பாக்கியா – புதிய திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்!
ஆனால், தற்போது வரைக்கும் மீனா முல்லைக்கு ஐந்து லட்சம் செலவு செய்ததை வைத்து தான் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். மீனாவின் செலவிற்காக மூர்த்தியிடம் மீனா காசு கேட்டபோது மூர்த்தி அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம் என கூறிவிட்டார். இதனால் கோபமான மீனா முல்லைக்காக மட்டும் பல லட்சங்கள் செலவு செய்தீர்கள் எனக்கு தர யோசிக்கிறீர்கள் எனக்கூறி சண்டை போட ஆரம்பித்துவிட்டார். இது மட்டுமில்லாமல் ஜனார்த்தனன் இந்த ஒரு சண்டையை வைத்து குடும்பத்தை பிரித்து மீனாவையும் ஜீவாவையும் தன்னுடன் அழைத்துச் செல்லவேண்டும் என திட்டம் போடுகிறார். உடனே மூர்த்தியின் வீட்டிற்கு வந்து எனது மகளுக்கு மட்டும் ஏன் காசு கொடுக்க தயங்குகிறார்கள் என சண்டை போட, மீனா நான் எங்கள் வீட்டுப் பிரச்சனையை பார்த்துக்கொள்கிறேன் என ஜனார்த்தனனை வீட்டை விட்டு போக சொல்லும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.