ஜீவாவை குடும்பத்தை விட்டு பிரிக்க திட்டமிடும் ஜனார்த்தனன், தாங்குமா குடும்பம்? “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் குடும்பத்தில் ஒரே சோகமான நிலைமை வந்துள்ளது. கதிர் வீட்டை விட்டு வெளியேறியதால் மூர்த்திக்கு நெஞ்சு வலி வருகிறது. மூர்த்தி அதில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக மூர்த்திக்கு இன்னொரு அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் பெரிய விரிசல் விழுந்துள்ளது. அண்ணன் தம்பிகள் பல கஷ்டத்தில் ஒற்றுமையாக இருந்த நிலையில் தற்போது முல்லை டிரீட்மென்ட்ரிக்கு வாங்கிய பணத்தால் பெரிய பிரச்சனை வந்துள்ளது. அதனால் கதிர் முல்லையை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறார். குடும்பத்தில் அனைவரும் தடுத்தும் கூட கதிர் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் அனைவரும் கதிர் முடிவை நினைத்து வருத்தப்படுகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் மூர்த்திக்கு கதிரை நினைத்து மிகவும் மன வருத்தமாக இருக்கிறது. அதை நினைத்து நினைத்து மூர்த்திக்கு நெஞ்சுவலி வருகிறது, அதனால் ஆபத்தான நிலையில் மூர்த்தியை மருத்துவமனையில் சேர்க்க மீனாவின் அப்பா தான் பணம் கொடுத்து உதவி செய்கிறார். ஆப்ரேசன் நல்லபடியாக முடிந்துவிட டாக்டர் மூர்த்தியை வேலை செய்ய கூடாது என சொல்கிறார். அப்போது மீனாவின் அம்மா மாப்பிள்ளை இனிமேல் நம்ம கடைக்கு வரவேமாட்டார் என சொல்ல, அப்படி எல்லாம் விடமாட்டேன் என ஜனார்த்தனன் சொல்கிறார்.
சன் டிவி “சித்தி 2” சீரியல் ப்ரீத்தி சர்மா யார் தெரியுமா? இதுவரை அறியாத தகவல்!
இந்த சூழ்நிலையில் மூர்த்தியை வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். அப்போது ஜனார்த்தனன் வேலை இருப்பதாக சொல்லி ஜீவாவை அழைக்கிறார். ஆனால் ஜீவா கடைக்கு செல்ல வேண்டும் என சொல்ல அதனால் மீண்டும் குடும்பத்தில் பெரிய பிரச்சனை வருகிறது. ஜனார்த்தனன் அடுத்து என்ன செய்வார். ஜீவா யாருடைய கடையை பார்ப்பார் என்பது எல்லாம் இனி எபிசோடுகளில் வர இருக்கிறது. மீண்டும் ஒரு பிரச்சனையை குடும்பம் எப்படி தாங்கும் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.