உடனடியாக ரூ.10000 வரை கடன் பெறும் பிரதமர் ‘ஜன் தன் யோஜனா’ திட்டம் – முழு விபரங்கள் இதோ!

0
உடனடியாக ரூ.10000 வரை கடன் பெறும் பிரதமர் 'ஜன் தன் யோஜனா' திட்டம் - முழு விபரங்கள் இதோ!
உடனடியாக ரூ.10000 வரை கடன் பெறும் பிரதமர் 'ஜன் தன் யோஜனா' திட்டம் - முழு விபரங்கள் இதோ!
உடனடியாக ரூ.10000 வரை கடன் பெறும் பிரதமர் ‘ஜன் தன் யோஜனா’ திட்டம் – முழு விபரங்கள் இதோ!

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்து பொதுமக்கள் பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்து வந்தனர். அதனால் வங்கிகளில் பல்வேறு திட்டங்களில் தங்களின் பணத்தை சேமிக்க தொடங்கினர். தற்போது ஓவர் டிராஃப்ட் வசதியின் கீழ் பணம் இல்லாமலேயே ரூ.10000 வரை பணம் பெற்றுக் கொள்வதற்கான திட்டத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.

பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டம்

இந்தியாவில் கொரோனா கால கட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு துறைகளில் உள்ள தொழில்களும் பாதிப்படைந்து நஷ்டத்தை சந்தித்தது. அதன் விளைவாக பெரும்பாலானோர் தங்களின் வேலைகளை இழந்து அத்துடன் சேமிப்பையும் இழந்து நிதி பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர். அதனால் தங்களின் பணத்தை வங்கிகளில் உள்ள சேமிப்பு திட்டத்தில் சேமிக்க தொடங்கினர்.

PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

இதனை தொடர்ந்து பல்வேறு திட்டங்களில் சேமிக்க தொடங்கியுள்ளனர். இதையடுத்து 2014ம் ஆண்டு பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்பதால் இத்திட்டத்தில் ஏராளமானோர் இணைகின்றனர். இந்த திட்டம் அனைத்து வங்கிகளிலும் உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் ஓவர் டிராஃப்ட் (Overdraft) வசதியின் கீழ் பணம் இல்லாமலேயே ரூ.10000 வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். இதில் ஓவர் டிராஃப்ட் வரம்பு தற்போது ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ரூ.5000 மட்டுமே வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தில் நிபந்தனையின்றி ரூ.2,000 வரை ஓவர் டிராஃப்ட் பெற முடியும். இந்த ஓவர் டிராஃப்ட் பெற தங்களின் சேமிப்பு கணக்கு தொடங்கி 6 மாதங்கள் முடிந்திருக்க வேண்டும். இவ்வாறு இல்லையெனில் 2000 ரூபாய் மட்டுமே பெற முடியும். அத்துடன் இதற்கான வயது 60லிருந்து 65 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் கணக்கு தொடங்கியவர்களுக்கு ரூபே கார்டும் வழங்கப்படுவதால் இதனை பயன்படுத்தி பணம் எடுப்பது, ஷாப்பிங் செய்வது உள்ளிட்டவை மேற்கொள்ள முடியும். அத்துடன் விபத்துக் காப்பீடு வசதியும் இதில் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக 2 லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீடு பெற முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!