ஜன.4 தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை – கல்வி நிறுவனங்கள், அலுவலங்கள் இயங்காது!
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் திருவிழா ஜனவரி 4ம் தேதியான நாளை கொண்டாடப்பட உள்ளதால் அங்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் குறிப்பிட்ட பகுதிகள் அல்லது மாவட்டத்தில் மட்டும் சிறப்பிக்கப்படும் திருவிழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களின் போது உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சிறப்பிக்கப்படும் ஹெத்தையம்மன் திருவிழா ஜனவரி 4ம் தேதியான நாளை நடக்க உள்ளது.
கேள்விக்குறியாகும் உலகப் பொருளாதார நிலை – எச்சரிக்கும் IMF தலைவர்!
Follow our Instagram for more Latest Updates
ஹெத்தையம்மன் படுகர் இன மக்களின் குலதெய்வமாக கருதப்படுகிறது. இதனால் அங்குள்ள சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி,ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா ஆகிய 8 கிராமங்களில் உள்ளவர்கள் இப்பண்டிகை அன்று விரதம் இருந்து பாத யாத்திரை செல்வது வழக்கம். இதனால் நாளை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
இதனால், அங்குள்ள பள்ளி,கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது என்றும், இதற்கு பதிலாக ஜனவரி 21ம் தேதி வேலை நாளாக ஈடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.