தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – கடலோர மாவட்ட மக்கள் கவனத்திற்கு!!

0
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - கடலோர மாவட்ட மக்கள் கவனத்திற்கு!!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - கடலோர மாவட்ட மக்கள் கவனத்திற்கு!!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – கடலோர மாவட்ட மக்கள் கவனத்திற்கு!!

தமிழகத்தில் தற்போது ஓரிரு இடங்களில் மட்டுமே மிகவும் லேசான மழை பெய்து வருகிறது. மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்நிலையில், அடுத்து வரும் நாட்களுக்களுக்கான வானிலை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு நிலவி வருகிறது. இதனால், இன்று தமிழக கடேலார மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும், பனி மூட்டம் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து ஜனவரி 4 மற்றும் 5ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. இதர மாவட்டங்களில்‌ வறண்ட வானிலை நிலவக்கூடும்‌.

EPFO கணக்குதாரர்கள் கவனத்திற்கு – ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறைகள் இதோ!

Follow our Instagram for more Latest Updates

மேலும், தமிழக தலைநகரான சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. நகரில் அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. குறிப்பாக மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!