ஜன.15ம் தேதி SBI கிளார்க் தேர்வு 2023 – தேதியை மாற்ற வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் வரும் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதே தேதியில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று தற்போது கோரிக்கைகள் எழுந்துள்ளது.
SBI கிளார்க் தேர்வு:
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் 5,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கான முதல் கட்ட எழுத்துத்தேர்வு கடந்த நவம்பர் மாதம் நாடு முழுவதும் நடைபெற்றது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட மெயின்ஸ் தேர்வு வரும் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. ஏனெனில் தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையை கொண்டாடப்படவுள்ளது.
அந்த நாளில் எஸ்பிஐ கிளார்க் தேர்வும் நடைபெறவுள்ளதால் தமிழக மக்கள் எஸ்பிஐ தேர்வின் பங்கேற்க முடியாத முடியாத சூழல் உருவாகி உள்ளது. அதனால் தமிழர்கள் பங்கு பெறும் வகையில் எஸ்பிஐ கிளார்க் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.