தமிழகத்தில் ஜன. 14 போகி பண்டிகை – சென்னை மாநகராட்சி பிறப்பித்த முக்கிய உத்தரவு!

0
தமிழகத்தில் ஜன. 14 போகி பண்டிகை - சென்னை மாநகராட்சி பிறப்பித்த முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் ஜன. 14 போகி பண்டிகை - சென்னை மாநகராட்சி பிறப்பித்த முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் ஜன. 14 போகி பண்டிகை – சென்னை மாநகராட்சி பிறப்பித்த முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் 2023 ஜனவரி 14 ஆம் தேதி அதாவது பொங்கல் பண்டிகை முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

போகி பண்டிகை

தமிழகத்தில் ஆண்டு தோறும் தமிழ் மாதமான தை முதல் நாள் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப்பண்டிகையாகும். பழையன கழித்து புதிய புகுத்தல் இப்பண்டிகையின் சிறப்பாகும். இந்த போகி பண்டிகை நாளில் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை வெளியேற்றி அதனை தீயிட்டு எரிப்பர்.

அதிர்ச்சியளிக்கும் ஆபரணதங்கத்தின் விலை – இன்றைய நிலவரம் இதோ!

Follow our Instagram for more Latest Updates

அந்த தீயில் எரியும் பழைய பொருட்களை போல நம் மனதில் இருக்கும் தீய எண்ணங்களும் நீங்கி புது வாழ்வு பிறக்கும் என்பது நம்பிக்கை. நடப்பு ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் காற்று மாசுபாட்டை தவிர்க்கும் வகையிலும் பிளாஸ்டிக், ரப்பர் டியூப் பொருட்களை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பொருள்களை எரிப்பதனால் காற்று மாசுபாடு அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் மேற்சொன்ன பொருட்களை எரிப்பதை தவிர்த்து அதனை மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து பொது மக்களுக்கு தற்போது விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!