தமிழகத்தில் ஜன. 10 மதுக்கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!
பசுபதி பாண்டியன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மதுக்கடை மூடல்:
தமிழகத்தில் தேவர் குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் அவர்களது நினைவு தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 10ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இவரது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இவரது திருவுருவப் படத்திற்கு முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்துவது வழக்கம்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த நேரத்தில் அசம்பாவித நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டு ஜனவரி 10ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த அனைத்து பார்களையும் மூட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தடையை மீறி மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் மதுபானத்தை இடம் மாற்றுதல், பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் கண்டறியப்பட்டால் தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.