Vijay TV Bigg Boss 5 Promo | போட்டியாளர்களின் சுயரூபம் தெரிந்து விட்டதாக கூறும் கமல்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனால் இன்றைய காட்சிகள் குறித்து அதிக ஆர்வம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இந்த முறை வழக்கத்தை விட அதிக மாற்றங்களை சந்தித்து உள்ளது. எப்போதும் இல்லாத வகையில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்தனர். அதன்பிறகு, 50 நாட்கள் எட்டிய நிலையில், 2 வைல்டு கார்டு போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். முதன் முறையாக திருநங்கை போட்டியாளராக கலந்து கொண்டது. கமலுக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியது என்று பல மாற்றங்கள் இந்த முறை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிக எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – தலைவர்கள் முக்கிய கோரிக்கை!
தற்போது நிகழ்ச்சி அதன் இறுதி நாட்களை எட்டியுள்ளது. 90 நாட்களை நெருங்கி விட்ட நிலையில், இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அதிக போட்டியுடன் கலந்து கொண்டனர். இந்த டாஸ்கில் ஜெயிக்கும் ஒருவர் போட்டியின் இறுதி வாரத்திற்கு நேரடியாக சென்று விடுவார். இதனால் இந்த டாஸ்கில் ஜெயிக்க போட்டிகள் கடுமையாக வைக்கப்பட்டது. அதில், இறுதியாக அமீர் மற்றும் சிபி இருவரும் மட்டுமே கடைசி டஸ்கில் கலந்து கொண்டனர். அதில், அமீர் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்ஐ ஜெயித்து விட்டார்.
காஞ்சிபுரத்தில் ஜன.4ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்நிலையில், இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், கமல் போட்டியாளர்களின் உண்மையான சுயரூபம் தெரிந்து கொண்டதாகவும், போட்டியின் பாதியில் வந்த அமீர் முதல் இறுதி போட்டியாளராக மாறி இருப்பதும் சிலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. போட்டி கைகலப்பு வரை வந்துள்ளது என்று பல விஷயங்களையும் பற்றி சூசகமாக கூறி உள்ளார். இந்த விஷயங்களை பற்றி தான் இன்று பேச இருக்கிறார். இதனால் பேர்வழியாளர்கள் மத்தியில் அதிக ஆர்வம் எழுந்துள்ளது.