வார இறுதி ஊரடங்கு மேலும் 3 மாவட்டங்களில் ரத்து – ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு!

0
வார இறுதி ஊரடங்கு மேலும் 3 மாவட்டங்களில் ரத்து - ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு!
வார இறுதி ஊரடங்கு மேலும் 3 மாவட்டங்களில் ரத்து - ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு!
வார இறுதி ஊரடங்கு மேலும் 3 மாவட்டங்களில் ரத்து – ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு!

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விதிக்கப்பட்டுள்ள வார இறுதி ஊரடங்கை மேலும் 3 மாவட்டங்களுக்கு ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் 20 மாவட்டங்களிலும் இரவு ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.

ஊரடங்கு ரத்து

கொரோனா புதிய பாதிப்புகள் எதுவும் பதிவு செய்யப்பட்டு வராத ரம்பன், கிஷ்த்வார் மற்றும் குல்கம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு உத்தரவை ரத்து செய்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், யூனியன் பிரதேசத்தில் உள்ள 20 மாவட்டங்களிலும் இரவு ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். இது குறித்த அறிவிப்பின் கீழ், ஜம்மு காஷ்மீரின் 20 மாவட்டங்களில் தற்போது வரை 16 மாவட்டங்களுக்கு வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று சட்டப்பேரவை அனைத்து கட்சி கூட்டம் – முக ஸ்டாலின் தலைமை!

இதை தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள, மற்ற நான்கு மாவட்டங்களில் மட்டும் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜம்மு காஷ்மீரில் ஜூலை 31 ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் படி,

  • உணவகங்கள், பார்கள் அனைத்தும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 50% மாக செயல்படலாம்.
  • இவை அனைத்தும் தடுப்பூசி போட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
  • மற்ற அனைத்து வெளிப்புற கடைகள் வாரத்தின் அனைத்து நாட்களிலும், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
  • உட்புற ஷாப்பிங் வளாகங்கள், மால்களில் உள்ள அனைத்து கடைகளும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி போடப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே திறக்கலாம்.
  • உட்புற விளையாட்டு வளாகங்கள் மற்றும் ஜிம்கள் தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்காக 50% மாக திறக்க அனுமதிக்கப்படுகின்றன.
  • இருப்பினும், நீச்சல் குளங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
  • கட்டண பொது பூங்காக்கள் தடுப்பூசி போடப்பட்ட பொதுமக்களுக்கு மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகின்றன.

TN Job “FB  Group” Join Now

  • தவிர யூனியன் பிரதேசத்தின் 4 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள் கிழமை காலை 7 மணி வரை வார இறுதி ஊரடங்கு உத்தரவு தொடரும்.
  • தினசரி இரவு ஊரடங்கு உத்தரவை பொருத்தளவு இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
  • இதை தவிர, சாலை, ரயில் அல்லது விமானம் வழியாக ஜம்மு காஷ்மீர் வரும் பயணிகளுக்கு எந்த தடையும் இருக்காது என்றும் அரசு அறிவித்துள்ளது.
  • இருப்பினும், ஜம்மு காஷ்மீர் வந்தவுடன் அவர்கள் கட்டாயமாக கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
  • ஜம்முவில் உள்ள கத்ராவில், மாதா வைஷ்ணோ தேவி யாத்திரைக்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!