11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு!!
கொரோனா நோய் பரவலின் இரண்டாம் அலையை கருத்தில் கொண்டு பல்வேறு மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து வரும் நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீர் கல்வி வாரியம் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது.
பொதுத்தேர்வு:
இந்தியாவில் கடந்த மூன்று மாத காலத்திற்கும் மேலாக கொரோனா நோய்பரவல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா நோய்பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
இன்று முதல் முழு ஊரடங்கு தளர்வுகள் அமல் – மாநில அரசு உத்தரவு!
இதை தொடர்ந்து தமிழகம் உட்பட பல மாநிலங்கள் தங்களது மாநிலத்தில் நடைபெற இருந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது. தற்போது அதேபோல் ஜம்மு காஷ்மீர் கல்வி வாரியம் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய முடிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்றால் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு ஜம்மு காஷ்மீர் முழுவதும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
மேலும் ஜம்மு காஷ்மீரில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 8ம் தேதி முதல் ஜூலை 25ம் தேதி வரை கோடை விடுமுறை கடைபிடிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியாகியுள்ளது. தற்போது ஜம்மு காஷ்மீர் கல்வி வாரியம் பொதுத்தேர்வை ரத்து செய்தது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.