11ம் வகுப்பு பொதுதேர்வுகள் தள்ளிவைப்பு – அரசு உத்தரவு!!
ஜம்மு காஷ்மீரில் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளதால் அங்கு 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று லெப்டினன்ட் கவர்னர் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று:
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் மட்டுமே நடத்தப்பட்டது. ஜம்மு & காஷ்மீரில் 9 முதல் 12 ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்க அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பள்ளிகளும் பிப்ரவரி 1ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை தொடங்கியது.
பள்ளிகள் ஜூலை மாதம் முதல் மீண்டும் திறப்பு – லான்செட் நிறுவனம் ஆய்வு!!
தள்ளிவைப்பு:
தற்போது ஜம்மு காஷ்மீரில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை அதிகரித்து வருவகிறது. அங்கு ஏப்ரல் 3ம் தேதி முதல் நடந்து வரும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மேலும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒரு மாதத்திற்கு தள்ளி வைத்தும் நேற்று அறிவித்துள்ளது. மேலும், அங்கு பொது மக்கள் கூடுவதற்கான கட்டுப்பாடுகள் 200இல் இருந்து 100 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
11ம் வகுப்பு தேர்வுகள்:
ஜம்மு-காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னர் அவர்கள் இன்று 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா பரவல் உச்சம் காரணமாக மறுஅறிவிப்பு வரும் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இன்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் பள்ளிக்கல்வி இயக்குனரகம் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதியளித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்