10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: 12ம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைப்பு – அரசு அறிவிப்பு !
ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் மாற்றங்களை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று:
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த ஒரு வருடமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் பாடங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே நடத்தப்பட்டது. ஜம்மு & காஷ்மீரில் 9 முதல் 12 ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்க அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிகள் அதன்படி செயல்படத் தொடங்கியது.
வார இறுதி சனி, ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!!
தள்ளிவைப்பு:
தற்போது ஜம்மு காஷ்மீரில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை அதிகரித்து வருவகிறது. அங்கு ஏப்ரல் 3ம் தேதி முதல் நடந்து வரும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மேலும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒரு மாதத்திற்கு தள்ளி வைத்தும் அறிவித்துள்ளது.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
ஜம்மு காஷ்மீரின் கவர்னர் லெப்டினன்ட் மனோஜ் சின்ஹா அவர்கள் அலுவலகத்தில் இருந்து இது தொடர்பாக அதிகாரபூர்வ டிவீட்டர் செய்தி ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்து வரும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒரு மாதத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாகவும், அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு துரையின் அதிகாரபூர்வ இணையதளத்தை தொடர்ந்து கவனித்து வருமாறும் கூறப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு உள்மதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Next year 10th cbse exams are held or not