தமிழகத்தில் ஜனவரி முதல் மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு? அரசு விளக்கம்!

0
தமிழகத்தில் ஜனவரி முதல் மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு? அரசு விளக்கம்!
தமிழகத்தில் ஜனவரி முதல் மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு? அரசு விளக்கம்!
தமிழகத்தில் ஜனவரி முதல் மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு? அரசு விளக்கம்!

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை ஜூலை 15ம் தேதி நடத்த அனுமதி வேண்டி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

ஜல்லிக்கட்டு:

தமிழகத்தில் மிகவும் பாரம்பரியமான மற்றும் தொன்மையான விளையாட்டுகளுள் ஒன்று ஜல்லிக்கட்டு ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டு என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில் ஜல்லிக்கட்டில் காளையை அடங்குபவர்களுக்கு பெண்ணை திருமணம் செய்து வைத்த வழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் 2ம் நாளான மாட்டு பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படும். குறிப்பாக மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. அதே போல பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். இதனை காண ஏராளமான மக்கள் வருகை புரிவர்.

Exams Daily Mobile App Download

இந்த ஜல்லிக்கட்டு தமிழகத்தின் ஒரு அடையாளமும் கூட, மேலும் இது ஆண்களின் வீரத்தையும், மாடுவளர்ப்பையும் வெளிகாட்டும் வகையில் அமைகிறது. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. இதற்கு தமிழக மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள விலங்குகள் பட்டியலில் காளை மாடு இடம்பெற்றுள்ளதால் அவற்றை கொண்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மெரினா கடற்கரையில் லட்ச கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக உச்ச நீதிமன்றம் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியது. இந்த நிலையில் ஜூலை 15 ல் மதுரை பள்ளப்பட்டியில் வடமாடு, மஞ்சுவிரட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் ஜனவரி முதல் மே மாதம் வரையே ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு நடத்த முடியும் என தமிழக அரசு அறிவித்துள்ளதால் மஞ்சுவிரட்டு நடத்தக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!