இன்னும் ஆறே மாதங்களில் பெண்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட் – மாநில அரசு அதிரடி!
பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் அரசு முக்கிய திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு வேலை:
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பெண்களின் முன்னேற்றத்தை பொறுத்தே அமையும். இதை நன்றாக உணர்ந்த மாநில அரசுகள் பல திட்டங்களை பெண்களுக்காக அமல்படுத்தியுள்ளது. தமிழக அரசு கூட பெண்கள் வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்லும் போது பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என சாதாரண அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்ற திட்டத்தை அமல்படுத்தியது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு …! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் அரசும் ஒரு முக்கிய திட்டத்தை தொடங்கியுள்ளது. அதாவது அரசு சார்ந்த மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் வீட்டில் இருந்தே பெண்கள் பணிபுரியுமாறு ஒரு திட்டத்தை அம்மாநில அரசு ஆரம்பித்துள்ளது. அம்மாநிலத்தின் கடைசி பட்ஜெட் உரையின் போது அம்மாநில முதல்வர் அசோக் கெலோட் அவர்களால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோளே இன்னும் 6 மாதங்களில் 20,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரவேண்டும் என்பது தான். மாநில அரசின் இந்த திட்டத்தில் இணையும் நிறுவனங்களுக்கு 20% நிதி உதவியும் ராஜஸ்தான் அரசால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்