தீபாவளிக்கு அரசு வெளியிட்டுள்ள ஜாக்பாட் அறிவிப்பு – இனி ரேஷன் கடையில கூட்டம் அலைமோதும்!
மாநிலத்தில் உள்ள மக்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி பரிசு ஒன்றை அளிக்கும் வகையில் புதிய திட்டத்தை மகாராஷ்டிரா அரசு செயல்படுத்த உள்ளது. ரேஷன் கார்டு மூலம் அளிக்க உள்ள இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
வெள்ளி திட்டம்:
தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அரசு சிறப்பு திட்டம் வகுத்துள்ளது. ஏழைகள் மற்றும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச ரேஷன் உள்ளிட்ட பல சிறப்பு வசதிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. மேலும், இந்த தீபாவளிக்கு 513 கோடி ரூபாய்க்கான சிறப்புத் தொகுப்பை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
மாநிலத்தில் உள்ள 1.5 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஏக்நாத் ஷிண்டே அரசு தீபாவளி பரிசு வழங்க உள்ளது. வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்கு மாநிலத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு 100 ரூபாய்க்கு மளிகைப் பொருட்களை வழங்க மகாராஷ்டிரா அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 100 ரூபாய் கொண்ட இந்த பாக்கெட்டில் ஒரு கிலோ ரவை, நிலக்கடலை, சமையல் எண்ணெய், பருப்பு மற்றும் மஞ்சள் ஆகியவை இருக்கும்.
அதிரடியாக உயர்ந்துள்ள இந்திய பங்குச்சந்தைகள் – மகிழ்ச்சியில் வணிகர்கள்!
Exams Daily Mobile App Download
இந்த சலுகையில் 30 நாட்களுக்கு பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்றும், சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய், ரவை ஆகியவற்றை ரூ.478 கோடிக்கு அரசு கொள்முதல் செய்துள்ளதாகவும், இது தவிர ரேஷன் கார்டுதாரர்களுக்கான இதர உணவுப் பொருட்கள் 35 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்