சீனியர் சிட்டிசன்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – உயரும் வட்டி விகிதம்! முழு விவரம் இதோ!
நாடு முழுவதும் மக்களின் ஓய்வூதியத்திற்கு பின் பண கஷ்டம் வராமல் இருக்க பல திட்டங்களை சீனியர் சிட்டிசன்களுக்கு வங்கிகள் கொண்டு வந்துள்ளன. இந்நிலையில் தற்போது அவர்களுக்கு 2 மகிழ்ச்சியான செய்திகள் வெளியாகி இருக்கிறது.
வட்டி விகிதம்:
வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்களது ஓய்வூதிய காலத்தில் பயன்பெறும் வகையில் சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் பிற்காலத்தில் அதிக வட்டியில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை கிடைக்கும். இந்நிலையில் தற்போது இந்த திட்டத்தின் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது சிறு சேமிப்பு திட்டமான சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம் 0.20% உயர்த்தப்படுவதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு மூலமாக சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்துக்கு இனி 7.6% வட்டி கிடைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் பாதுகாப்பான முதலீடு மட்டுமல்லாமல் நல்ல வட்டி கிடைக்கும் திட்டமாகவும் உள்ளது. வருமான வரிச் சட்டம் பிரிவு 80C கீழ் வரி சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன. அதனால் சீனியர் சிட்டிசன்களால் அதிகம் வரவேற்பு பெற்ற திட்டமாக இந்த திட்டம் இருக்கிறது. மேலும் சீனியர் சிட்டிசன்களுக்கு மற்றொரு நல்ல செய்தியும் வெளியாகி இருக்கிறது.
உஷார் மக்களே.. தமிழகத்தில் நாளை (01.10.2022) இந்த இடங்களில் மின்தடை – மின்சார வாரியம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அதன் படி ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.50% உயர்த்தியுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக ரெப்போ வட்டி விகிதம் 5.90% ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பை தொடர்ந்து வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தும். ஏற்கனவே வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ள நிலையில், தற்போது ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால், ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்துள்ள சீனியர் சிட்டிசன்கள் பயன்பெறுவார்கள்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்