ரயில்வே ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 10 மாத டிஏ நிலுவைத் தொகை விரைவில்!
மத்திய அரசின் ரயில்வே ஊழியர்களுக்கான 10 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி 14 சதவீதம் உயர்த்தப்பட்டு வழங்கப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அரசின் இந்த முடிவால் லட்சக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள்.
DA நிலுவைத்தொகை:
மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் 30, 2022 அன்று 3% அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் (DR) ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என மத்திய அமைச்சரவை அறிவித்தது. இந்த உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களின் DA தற்போது 31%க்கு பதிலாக 34 சதவீதம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு 2 முறை DA செலுத்தப்படுகிறது. தற்போது 2வது தவணை DA ஜூலையில் செலுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ரயில்வே ஊழியர்களுக்கான அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த அறிவிப்பின் படி, ஊழியர்களுக்கு அகவிலைப்படி 14 சதவீதம் உயர்த்தப்பட்டு 10 மாதங்களாக நிலுவையில் உள்ள நிலுவைத் தொகை வழங்கப்படும். அரசின் இந்த முடிவால் லட்சக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். ரயில்வே ஊழியர்களுக்கான அரசாணை வெளியிடும் போது, இந்த மத்திய ஊழியர்களுக்கு 10 மாத நிலுவைத் தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதனுடன் அவர்களது அகவிலைப்படி 14 சதவீதம் அதிகரிக்கப்படும். இருப்பினும் ரயில்வே வாரியம் டிஏ உயர்வை இரண்டு பகுதிகளாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜூலை 1, 2021 முதல் அகவிலைப்படி 7 சதவீதமும், ஜனவரி 1, 2022 முதல் 7 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆறாவது ஊதியக் குழுவின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு முதல் 7 சதவீத உயர்வு பொருந்தும். தற்போது அதன் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 189 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த ஊழியர்களின் DA ஜூலை 1, 2021 முதல் 196 சதவீதத்தின் அடிப்படையில் மட்டுமே அதிகரிக்கப்படும். அதேபோல் 2022 ஜனவரி 1 முதல் 7 சதவீத அதிகரிப்புடன், ஊழியர்களின் எண்ணிக்கை 203 சதவீதமாக அதிகரிக்கும். இதனுடன் ஊழியர்களுக்கு மே மாத சம்பளத்துடன் 10 மாத நிலுவைத் தொகையும் வழங்கப்படும். ஊழியர்களுக்கு டிஏ உயர்வு மற்றும் 10 மாத நிலுவைத் தொகையை ஒரே நேரத்தில் வழங்கினால், அவர்களின் சம்பளத்தில் பெரிய உயர்வு ஏற்படும்.