மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 5% அகவிலைப்படி (DA) உயர்வு?

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - 5% அகவிலைப்படி (DA) உயர்வு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - 5% அகவிலைப்படி (DA) உயர்வு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 5% அகவிலைப்படி (DA) உயர்வு?

தற்போது 7வது சம்பள கமிஷனின்படி ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி (DA) தொகை 5% ஆக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

அகவிலைப்படி உயர்வு

சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான AICPIW தரவு ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வுக்கான நம்பிக்கையை மீண்டும் தூண்டியுள்ளது. அதாவது, அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் விரைவில் இது குறித்த அறிவிப்புகளை பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சமீபத்திய ஊடக அறிக்கைகளை நம்பினால், ஜூலை மாதத்தில் DA தொகை ஐந்து சதவிகிதம் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. இதன் மூலம் அரசு ஊழியர்களின் மொத்த DA தொகை 39 சதவீதத்தை எட்டும்.

TN Job “FB  Group” Join Now

இதற்கு முன்பு ஜூலை தவணைக்கான அகவிலைப்படி உயர்வு 4% இருக்கும் என்று செய்திகள் வெளியாகின. இருப்பினும் ஏப்ரல் முதல் AICPI குறியீடு சற்று அதிகமாக உயர்வடைந்துள்ளது. வழக்கமாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொகை ஆண்டுக்கு இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான அகவிலைப்படியின் முதல் அதிகரிப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி மொத்த DA தொகை 34% ஆக உள்ளது. இதற்கிடையில் ஜனவரி மாதத்தில் AICPI தரவு 0.3 புள்ளிகள் குறைந்து 125.1 ஆக இருந்தது. பிப்ரவரி, 2022க்கான அகில இந்திய CPI-IW 0.1 புள்ளிகள் குறைந்து 125 ஆக இருந்தது.

TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – வெற்றி பெற டிப்ஸ்!

மேலும், மார்ச் மாதத்தில், AICPI குறியீடு 1 புள்ளி ஏற்றம் கண்டு 126 ஆக உள்ளது. தொடர்ந்து ஏப்ரல் மாதத்திற்கான AICPI புள்ளிகள் 1.7 தரவு அதிகரித்து 127.7 ஆக இருக்கிறது. இப்போது ஏப்ரல் மாதத்தை தொடர்ந்து AICPI இன்டெக்ஸ் மேலும் உயர்வடைந்தால் ஊழியர்களுக்கு டிஏ தொகை 5 சதவிகிதம் வரை உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது மொத்த டிஏ தொகை 39 சதவிகிதம் வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு அறிவிக்கப்பட்டால் சுமார் 1.16 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!