டிசிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – 8% வரை சம்பள உயர்வு?
கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டங்களில், நாட்டில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, ஐடி துறையில் பணியாளர்களின் தேவையும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பள உயர்வு:
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் அனைத்து முன்னணி நிறுவனங்களும், ஊழியர்களைக் கட்டாயம் அலுவலகத்திற்கு அழைத்துள்ளது. ஆனால் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் மட்டும் இதுவரை ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவது பற்றி உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை. ஏனென்றால் ஐடி சேவை ஊழியர்கள் பலர் அலுவலகத்திற்கு அழைக்கப்படும் காரணத்தாலேயே அதிகளவிலானோர் பணியை ராஜினாமா செய்து வரும் காரணத்தால், சில வாரங்களுக்கு முன்பு துவங்கிய அனைத்து பணிகளையும் அப்படியே நிறுத்திவிட்டது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் TCS முக்கியமான மற்றும் உறுதியான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதாவது இந்த மாதம் முதல் டிசிஎஸ் நிறுவனம் உயர் அதிகாரிகளை மட்டும் அதாவது மொத்த ஊழியர்களில் சுமார் 8 சதவீத ஊழியர்களை மட்டும் வாரம் 3 நாட்களுக்கு கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது, மற்ற 2 நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் 6 லட்சம் ஊழியர்களில் தற்போது 50000 ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர உள்ளனர். இந்நிலையில் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
IBPS தேர்வில் வெற்றி பெற நினைப்போர் கவனத்திற்கு – சிறந்த பயிற்சி வகுப்புகள் இதோ!
முன்னதாக, 2023 நிதியாண்டின் முதல் (ஜூன்) காலாண்டுக்கான வரவு செலவு அறிக்கையை டிசிஎஸ் நிறுவனம் தாக்கல் செய்தது. இந்த காலாண்டில் அதன் நிகர லாபம் 9,478 கோடியாக உள்ளது. இது, கடந்த காலாண்டை விட 5.2% அதிகமாகும். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டிசிஎஸ் நிறுவனத்தின் சர்வதேச மனிதவளத்துறையின் தலைவர் மிலந்த் லக்காட் ,” நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி விகிதம் குறிப்பிடத்தகுந்த அளவு உள்ளது. பணியாளர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த ஜூன் 30ம் தேதி அன்று, மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 606,331 ஆகும்” என்று தெரிவித்தார்.பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று கூறிய அவர், நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 5 முதல் 8% வரை சம்பள உயர்வு இருக்கும் என்றும் தெரிவித்தார்.