தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – 8.13% வரை ஊதிய உயர்வு!
டீம்லீஸ் நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வில் இந்த ஆண்டு தனியார் துறை ஊழியர்களுக்கு 8.13% வரை ஊதிய உயர்வு இருக்கும் என்று தெரிவித்துள்ளது. ஊழியர்களின் திறன் மேம்பாட்டிற்கு ஏற்ப இந்த ஊதிய உயர்வு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சித்தது. முக்கிய நடவடிக்கையாக ஊரடங்கு விதிக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டது. இதனால் விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி போன்ற அனைத்தும் தடைபட்டது. இத்தகைய தொழில் சரிவால் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
Exams Daily Mobile App Download
அதனால் ஏராளமான ஊழியர்கள் வேலை இழந்தனர். ஊரடங்கில் மக்கள் வாழ்வாதாரம் இழந்த நிலையில் மாத வருமானம் இன்றி அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இத்தகைய சூழலில் அரசு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி மெல்ல மெல்ல நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது. அதன் பிறகு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்த பிறகு மக்கள் வேலை வாய்ப்புகளை தேடி வந்தனர். ஆனால் நாடு முழுவதுமாக இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் வேலை வாய்ப்புகள் குறைந்து காணப்பட்டது. ஊதிய குறைப்பு போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு | மதிப்பெண் பட்டியல் விபரங்கள் வெளியீடு!
இந்த நிலையில் டீம்லீஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த ஆண்டில் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 8.13 சதவீதம் வரை தனியார் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்கும் என்று தெரிவித்துள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் சம்பள உயர்வு குறித்து பரிசீலனை செய்திருப்பதாகவும் ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது. ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்கு ஏற்ப சம்பள உயர்வு அளிக்க நிறுவனங்கள் தயராக உள்ளனர். குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் திறன் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.