நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட் – சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி சரிவு!
தமிழகத்தில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. இந்த நேரத்தை பயன்படுத்தி நகைப்பிரியர்களும், பெண்களும் தங்க நகைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தங்கம் விலை:
நாடு முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று காரணத்தால் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கடைகள், வணிக வளாகங்கள், மூடப்பட்டது. தொழில்கள் முடங்கியதால் முதலீட்டாளர்கள் கடும் பொருளாதார சரிவை சந்தித்தனர். இந்த நேரத்தில் ஏராளமானோர் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர். இதனால் தங்கம் விலை அதிகரித்தது. இதனால் நகைப்பிரியர்கள் தங்க நகைகளை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அவ்வப்போது தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்டு வந்தது.
Exams Daily Mobile App Download
இந்த நேரத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரின் விளைவால் மீண்டும் தங்கம் விலை எதிர்பாராத அளவு உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்களும், நகை பிரியர்களும் நகை வாங்குவதில் பொருளாதார ரீதியான சிக்கலை சந்தித்தனர். போருக்கு முன்பு ஒரு சவரன் 36,000க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு சவரன் 40,000 ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. தங்கம் விலையானது ஒரு நாளைக்கு 2 முறை விலை மாற்றம் அடைகிறது. திருவிழா நாட்கள், பண்டிகைகள் சுப முகூர்த்த நாட்களில் தங்கம் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தங்கம் விலை அதிகரிக்கும் தற்போது இயல்பாகவே விலை அதிகரித்து காணப்படுகிறது.
சபரிமலைக்கு செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை!
இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ரூ.37,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து கிராம் ரூ.4,745-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.66-க்கு விற்கப்படுகிறது. இந்த வாரத்தில் தங்கம் விலை குறைந்துள்ளதால் மக்கள் நகைகள் வாங்க முற்படுகின்றனர்.