மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – விரைவில் 5% அகவிலைப்படி (DA) உயர்வு?
இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒரு வேளை அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த அகவிலைப்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த வருடம் அகவிலைப்படி தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் 3% உயர்த்தப்பட்டு தற்போது 34% ஆக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சுமார் 1.16 கோடி ஊழியர்கள் பயன்பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது 7வது மத்திய ஊதிய குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜூலை மாதம் மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Exams Daily Mobile App Download
தற்போதைய சூழலில் மத்திய அரசு அகவிலைப்படியை 5% வரை அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 39% ஆக அதிகரிக்கும். இதனால் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் உயரும். மேலும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 27,000 மேல் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி நுகர்வோர் விலைக் குறியீடு அளவைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. 2022ம் ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், ஏஐசிபிஐ குறியீடு சரிவைக் கண்டது. பிறகு மார்ச் மாதத்தில் ஏஐசிபிஐ குறியீட்டு புள்ளிகள் அதிகரித்தது.
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு? அமைச்சரின் புதிய அறிவுறுத்தல்!
இதே முன்னேற்றத்தில் ஏப்ரல் மாதத்திற்கான தரவுகளின்படி ஏஐசிபிஐ குறியீடு 127.7 ஆக உள்ளது. எனவே மே மற்றும் ஜூன் மாதங்களில், இந்த புள்ளிகளின் தரவு 127ஐ கடந்தால் அகவிலைப்படி 5% வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.இதன் மூலம் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் 27,000க்கு உயரும். அதனை தொடர்ந்து அடிப்படை ஊதியம் ரூ.56,900 பெறும் ஊழியருக்கு அகவிலைப்படி 39% ஆக உயர்த்தப்பட்டால் மாதம் ரூ.22,191 கூடுதலாக கிடைக்கும் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.