மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ஊதிய உயர்வு! கணக்கீடு முறைகள் இதோ!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% வரை அகவிலைப்படி உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 39% ஆக அகவிலைப்படி உயரும். இந்த அகவிலைப்படி உயர்ந்தால் சம்பளமும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது சம்பள கணக்கீடு குறித்த விவரத்தை இப்பதிவில் காண்போம்.
சம்பள கணக்கீடு:
இந்தியாவில் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டு இரண்டு கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 31% ஆக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் மேலும் 3% உயர்த்தப்பட்டு தற்போது 34% ஆக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சுமார் 1.16 கோடி ஊழியர்கள் பயன்பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது 7வது மத்திய ஊதிய குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜூலை மாதம் மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நாளை முதல் தரிசன டிக்கெட் – தேவஸ்தானம் அறிவிப்பு!
அதாவது பணவீக்க விகிதத்தைப் பொறுத்தே அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கணக்கிட்டு வழங்கப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது பணவீக்கம் உயர்ந்துள்ளது. அதனால் 5% அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய தகவலின் படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டால் 39 சதவீத அகவிலைப்படி கிடைக்கும். இந்த அகவிலைப்படி உயர்ந்தால் அடுத்ததாக அடிப்படை ஊதியம் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது 5 % அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் அடிப்படை சம்பளம் ரூ.18,000 பெறும் நபருக்கு 900 ரூபாய் கூடுதலாக கிடைக்கும். அதே போல அடிப்படை சம்பளம் 25,000 ரூபாய் கொண்டவர்களுக்கு 1250 ரூபாய் கிடைக்கும். மேலும் அடிப்படை சம்பளம் 50,000 பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வால் 2500 ரூபாயும் 1 லட்சம் வரை ஊதியம் பெறுபவர்களுக்கு 50,000 ரூபாயும் கூடுதலாக கிடைக்கும். அதனை தொடர்ந்து 27,000க்கு உயரும். அதனை தொடர்ந்து அடிப்படை ஊதியம் ரூ.56,900 பெறும் ஊழியருக்கு அகவிலைப்படி 39% ஆக உயர்த்தப்பட்டால் மாதம் ரூ.22,191 கூடுதலாக கிடைக்கும் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.