மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – காத்திருக்கும் தீபாவளி பரிசு! ஊதிய உயர்வு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - காத்திருக்கும் தீபாவளி பரிசு! ஊதிய உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - காத்திருக்கும் தீபாவளி பரிசு! ஊதிய உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – காத்திருக்கும் தீபாவளி பரிசு! ஊதிய உயர்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தற்போது 4% உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த அகவிலைப்படி 38% ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து இன்பகரமான செய்திகள் வரவுள்ளன.

ஊதிய உயர்வு

இந்தியாவில் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த அகவிலைப்படியானது வருடந்தோறும் உயர்த்தப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றால் நாட்டின் பொருளாதார நிலை சரிவடைந்தது. அதனால் மத்திய அரசு அகவிலைப்படி தொகையை நிறுத்தி வைத்தது. அதன் பிறகு நாடு இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியதும் கடந்த 2021ம் ஆண்டு இரண்டு கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 31% ஆக அதிகரித்தது.

அதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் மீண்டும் 3% உயர்த்தப்பட்டு 34% ஆக ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நாட்டின் பணவீக்கம், உக்ரைன் – ரஷ்யா போர் ஆகியவற்றின் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது. அதனால் ஊழியர்கள் விலைவாசியை சமாளிக்கும் பொருட்டு அகவிலைப்படியை 4 % உயர்த்த வேண்டி கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து 7 – வது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கடந்த செப்டம்பரில் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு 38% ஆக அதிகரிக்கப்பட்டது.

‘இதை’ செய்யாதவர்களுக்கு பணம் கிடையாது – விவசாயிகளுக்கு மத்திய அரசின் எச்சரிக்கை!

Exams Daily Mobile App Download

இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெற்று வருகின்றனர். இந்த அகவிலைப்படி உயர்வு 2022 ஜூலை 1-ஆம் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படி மற்றும் சிட்டி அலவன்ஸ், PF கிராசுட்டி தொகையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது வரை இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!