மாநில அரசு ஊழியர்களுக்கு 34% ஆக உயரும் அகவிலைப்படி – ஜாக்பாட் அறிவிப்பு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு 34% ஆக உயரும் அகவிலைப்படி - ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு 34% ஆக உயரும் அகவிலைப்படி - ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு 34% ஆக உயரும் அகவிலைப்படி – ஜாக்பாட் அறிவிப்பு!

மத்திய அரசின் அகவிலைப்படி அறிவிப்பைத் தொடர்ந்து மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் உத்தரகாண்ட் அரசும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. அதாவது மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை பரிசாக வழங்கியுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் ஊழியர்கள் மத்தியில் அதிக மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஜாக்பாட் அறிவிப்பு:

ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்வுக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், உத்தரகாண்ட் அரசு தனது லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு ஒரு பெரிய செய்தியை வழங்கியுள்ளது. அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அறிவிப்பின்படி, உத்தரகாண்ட் அரசு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால், அரசு ஊழியர்களின் சம்பளமும் கணிசமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

மாநிலத்தின் 2 லட்சம் ஊழியர்களுடன், 1.25 லட்சம் ஓய்வூதியர்களும் இதன் பலனைப் பெறுவார்கள். மேலும் ஊழியர்களுக்கு ஜூன் மாதம் சம்பள உயர்வு வழங்கப்படும். இந்த அறிவிப்பால், ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெறும் ஊழியர்களின் அகவிலைப்படி 31 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதம் ஆக உயர்ந்து உள்ளது. ஜூன் மாத சம்பளத்தில் இருந்து உயர்த்தப்பட்ட அகவிலைப்படி கிடைக்கும்.அதே நேரத்தில், ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரையிலான நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மூர்த்தியிடம் பணம் கேட்கும் கடன் கொடுத்தவர், மீனாவிடம் பணம் கேட்கும் ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

7-வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் 6வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோரை அரசு கவனித்து வருகிறது. இது தவிர, ஆறாவது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ 7 சதவீதம் அதிகரித்துள்ளது. அத்தகைய ஊழியர்களுக்கு இப்போது 196 க்கு பதிலாக 203 சதவீதம் DA கிடைக்கும். இதையடுத்து ஐந்தாவது ஊதியக் குழுவின் கீழ், சம்பளம் வாங்கும் ஊழியர்களின் அகவிலைப்படி 13 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அவர்கள் இதுவரை 368 சதவீத டிஏ பெற்று வந்தனர். ஆனால் இப்போது 381% ஆக டிஏ அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!