மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – ஜாக்பாட் அறிவிப்பு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – ஜாக்பாட் அறிவிப்பு!

சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் அரசாங்கத்தை தொடர்ந்து தற்போது ஜார்க்கண்ட் மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

பழைய ஓய்வூதிய திட்டம்

தற்போதுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதில் ஜார்க்கண்ட் அரசாங்கம் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானைப் பின்பற்றும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் சிந்தித்து வரும் வேளையில் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் அரசாங்கம் இந்த செயல்பாட்டை முன்னெடுத்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது ஜார்க்கண்ட் அரசாங்கமும் தனது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இப்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவு வரைவு செய்யப்பட்டுள்ளதாக ஜார்க்கண்ட் நிதித் துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இது குறித்து நிதித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நாங்கள் வரைவு முன்மொழிவுடன் தயாராக இருக்கிறோம். ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இது தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவித்தார். இதற்கு முன்னதாக மார்ச் மாதம் ஜார்க்கண்ட் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளின் போது முதல்வர் ஹேமந்த் சோரன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைப்பது குறித்து சுட்டிக்காட்டினார்.

அதாவது, ‘பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த பல அரசாங்கங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. ஆனால் நாங்கள் ஏற்கனவே அதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டோம். விரைவில் அதை அறிமுகப்படுத்துவோம்’ என்று சோரன் சட்டசபையில் கூறி இருந்தார். OPSஐ பொருத்தளவு இதில் பொது வருங்கால வைப்பு நிதி வசதி உள்ளது மற்றும் ஓய்வூதியத்திற்கான சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படாது. மேலும், ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு நிலையான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதாவது கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக பெறப்படுகிறது.

தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

ஓய்வூதியத்தின் முழுத் தொகையும் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. அரசு ஊழியர் பணியில் இருக்கும் போது இறந்தால், குடும்பத்தைச் சார்ந்தவர் ஓய்வூதியம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், பொது வருங்கால வைப்பு நிதி வசதி கிடைக்கும். சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். ஓய்வுக்குப் பிறகு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் இல்லை. அதே போல ஊழியருக்கான ஓய்வூதியத் தொகை பங்குச் சந்தை வருமானத்தை பொறுத்தது. மேலும், பணவீக்கம் மற்றும் ஊதியக் குழுவின் பலன் NPSல் கிடைக்காது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!