தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அரசு வழங்கும் உதவித்தொகை!
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் ஏராளமானோர் தங்களின் வேலைகளை இழந்தனர். அதனால் அவர்களுக்கு உதவி புரியும் வகையில் மாதாந்திர உதவித்தொகை திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
உதவித்தொகை
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு ஏராளமான இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்பை இழந்தனர். இவர்களுக்கு உதவிபுரியும் வகையில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்க, “மாதாந்திர உதவித்தொகை”, என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இத்திட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை – அரசு பரிசீலனை!
இப்போது இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம். இதற்கு விண்ணப்பிக்க 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகள் புதுப்பித்திருக்க வேண்டும். அத்துடன் வேலைவாய்பற்றவராகவும் இருக்க வேண்டும். மேலும் இவர்களின் ஆண்டு வருமானம் ரூ.72000க்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200யும், இதில் மாற்றுத்திறனாளிக்கு ரூ.600யும் வழங்கப்படுகிறது.
10 வது தேர்ச்சி பெற்றவருக்கு BEL நிறுவனத்தில் வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு..!
இதனை தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ம் இதில் மாற்றுத்திறனாளிக்கு ரூ.600ம் வழங்கப்படுகிறது. இதே போல் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400யும், மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் ரூ.750யும் அளிக்கப்படுகிறது. மேலும் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.600ம், இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000யும் வழங்கப்படுகிறது. அத்துடன் இதில் தொலைதுார கல்வி பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் தினமும் கல்லூரி சென்று பயில்பவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. இதற்கு விண்ணப்பிக்க www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்றோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பிக்கலாம்.