தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – பயணப்படி மீண்டும் உயர்வு! அரசாணை வெளியீடு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - பயணப்படி மீண்டும் உயர்வு! அரசாணை வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - பயணப்படி மீண்டும் உயர்வு! அரசாணை வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – பயணப்படி மீண்டும் உயர்வு! அரசாணை வெளியீடு!

கொரோனா தொற்று தாக்கத்திற்கு மத்தியில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 25% ஆக குறைத்து வழங்கப்பட்டு வந்த பயணப்படி உள்ளிட்ட சில கூடுதல் சலுகைகளை மீண்டும் வழக்கத்தின் படி வழங்குவது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பயணப்படி உயர்வு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிலவி வரும் கொரோனா தொற்று சூழலுக்கு மத்தியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உள்ளிட்ட சில கூடுதல் சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் மீண்டுமாக, அரசு செலவினங்களின் சிக்கனம் கருதி கடந்த ஆண்டுகளில் 25% ஆக குறைக்கப்பட்ட பயணப்படியை இனி முழுமையாக வழங்குவது தொடர்பான சில ஆணைகளை அரசு வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், ‘கடந்த 2020-21 மற்றும் 2021-22 ஆண்டுகளில் ஏற்பட்ட கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தை எதிர்த்து போராடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக செலவினங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் சில சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த வகையில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி வாரியங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களுக்கான சில செலவுகள் தடை செய்யப்பட்டன.

அதிமுகவின் ஒற்றைத்தலைமை தீர்மானத்திற்கு தடை, OPS ஆதரவாளர்கள் கொண்டாட்டம் – தலைவர்கள் வரவேற்பு!

அதன் கீழ் பரிசுகள், பூங்கொத்துகள், சால்வைகள், நினைவுப் பரிசுகள், மாலைகள் மற்றும் கட்டுரைகளை வழங்குதல், உத்தியோகபூர்வ செயல்பாடுகள், கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள் அனைத்தும் தடை செய்யப்பட்டது. அதே போல ஜூன் மாதத்திற்கு பிறகு ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்வதில் உள்ள நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாநிலத்தின் நிதி நிலைமை தொடர்ந்து இறுக்கமாக இருந்தாலும், பெரிய நிர்வாக நலன் கருதி இந்த பழைய உத்தரவுகளை மறுபரிசீலனை செய்வதாக அரசாங்கம் அறிவித்தது.

அதன்படி 2022-2023 வரவுசெலவுத் திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி, சில சிக்கன நடவடிக்கைகள் தொடரும் என்றும் சிலவை மாற்றப்படும் என்றும் அரசு அறிவுறுத்துகிறது. அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் தொடரும் சிக்கன நடவடிக்கைகள், செயலகத்துறைகள், துறைத் தலைவர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளால் கண்டிப்பாகவும் கவனமாகவும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அரசுச் செயலர்கள் மற்றும் துறைத் தலைவர்கள், கீழ்நிலை அலுவலர்களுக்கு அதைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!