Google நிறுவனத்தின் பெண் ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – உடனடி இடமாற்றம்! இதற்காக தான்?
அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிரான தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளதால், கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் எந்த நாடுகளுக்கும் எப்போது வேண்டுமானாலும் இடமாற்றத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் இடமாற்றம்
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதித்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கி இருக்கிறது. இந்த தீர்ப்பு பெண்கள் சமுதாயத்தின் எதிர்ப்பை தூண்டியுள்ள நிலையில், அந்நாட்டின் ஆளும் கட்சி, எதிர்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் பெண்கள் நல அமைப்புகள் தீர்ப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதில், குறிப்பாக அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன், அமெரிக்க பாராளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த அறிவிப்பு பெண்களின் உரிமையை மறுப்பதாக இருப்பதாகவும் கருத்துக்கள் எழுந்திருக்கிறது.
Exams Daily Mobile App Download
இது போன்ற சூழலில் தனது பெண் ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் எந்த நாடுகளுக்கும் எப்போது வேண்டுமானாலும் இடமாற்றத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனத்தின் மனிதவள தலைவர் ஃபியோனா சிக்கோனி கூறுகையில், ‘அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில், அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதித்த உத்தரவு பெண்கள் மத்தியில் தாக்கத்தை உருவாக்கும்.
BEL நிறுவனத்தில் ரூ.40,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!
எங்களது நிறுவனத்தை பொறுத்தவரை ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் சம உரிமை கொடுத்து வருகிறோம். இந்த தீர்ப்பு எங்களது பெண் ஊழியர்களின் ஆரோக்கியம், வாழ்க்கை மற்றும் தொழில்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் முன்பு அமலில் இருந்த, பெண் ஊழியர்களுக்கு இடமாற்றம் குறித்த நடவடிக்கைகள் மீண்டும் தொடரும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் எந்தவொரு காரணமும் இன்றி வேறு நாடுகளுக்கு இடமாற்றத்தை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.