மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஜூலையில் 5% அகவிலைப்படி (DA) உயர்வு?
கடந்த முறை மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தொகை அடுத்த தவணையில் 3 சதவீதம் என்ற அடிப்படையில் மொத்தம் 39% ஆக உயரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக ஜூலை மாதம் அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இம்முறை 5 சதவீதமாக அகவிலைப்படி தொகையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த முறை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 1, 2022 முதல் 34 சதவீதம் என்ற அளவில் DA உயர்த்தப்பட்டது. இதற்கிடையில் நாட்டில் பணவீக்கம் உயர்ந்து வரும் நிலையில் அடுத்த தவணைக்கான DA உயர்வு உறுதியாக இருக்கும் என்று தெரிகிறது.
TN Job “FB Group” Join Now
இது குறித்த ஊடக அறிக்கைகளின்படி, அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI) 127 புள்ளிகளில் இருக்கும் போது DA உயர்வு ஐந்து சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்போது சிபிஐ அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே போல ஜனவரியில் AICPI குறியீடு 125.1 புள்ளிகளாக இருந்தது. இந்த எண்ணிக்கை பிப்ரவரியில் 125 ஆக குறைந்தது.
கோபியை நினைத்து கவலைப்படும் ஈஸ்வரி, ராதிகா சொல்வதை கேட்காமல் இருக்கும் மயூரா – இன்றைய எபிசோட்!
இருப்பினும், மார்ச் மாதத்தில் AICPI குறியீடு மீண்டும் ஒரு புள்ளி உயர்ந்து 126 புள்ளிகளாக இருந்தது. மேலும், ஏப்ரல் மாதத்தில் ஏஐசிபிஐ 127.7 புள்ளிகளாக உயர்ந்தது. இதே போல மே மற்றும் ஜூன் மாதத்திற்கான AICPI தரவு உயர்வடைந்தால், அதாவது அடுத்த மாதங்களில் புள்ளிவிவரங்கள் 127க்கு மேல் இருந்தால் DA தொகை ஐந்து சதவீதம் உயர்த்தப்படலாம் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த உயர்வு அறிவிக்கப்பட்டால் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 67 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.