மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி (DA) 5% உயர்வு?
7வது சம்பள கமிஷன்படி ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி (DA) தொகை 5% ஆக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அரசுத்துறை பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. அதன்படி, 7வது ஊதியக்குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏவை ஜனவரி 2022ல், 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஜூலை மாதத்தில், மீண்டும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 39 சதவீதமாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் அகவிலைப்படி 5 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்பது மார்ச் மாதத்தில் வந்த அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI) மூலமாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நுகர்வோர் விலைக் குறியீடு புள்ளிவிவரங்களில் சரிவு ஏற்பட்டது. இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஜூலை – ஆகஸ்ட் மாதங்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது. ஆனால் மார்ச் மாத புள்ளி விவரங்கள் வெளியான பிறகு அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஜூன் 20 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடல் – மாநில அரசு அதிரடி முடிவு!
அடுத்து வரும் ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு 5% சதவீதமாக இருந்தால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக உயரும். இருப்பினும் ஏப்ரல், மே மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை என்றாலும், அதிகரித்து வரும் பணவீக்கத்தைப் பார்க்கும்போது, நுகர்வோர் விலைக் குறியீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அகவிலைப்படி உயர்வை ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த உயர்வு அறிவிக்கப்பட்டால் சுமார் 1.16 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.