மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – விரைவில் DA உயர்வு? முழு விவரம் இதோ!
கடந்த ஏப்ரல் மாதம் 1 புள்ளி உயர்வுடன் வெளியான AICPI குறியீடு அடுத்த மாதங்களிலும் உயர்வை கண்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகை 3% அதிகரிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மொத்த DA 37%ஐ எட்ட வாய்ப்புள்ளது.
அகவிலைப்படி உயர்வு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பணவீக்கத்திற்கு எதிராக, மீண்டும் அகவிலைப்படி தொகையை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, வரும் காலங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட சில சிறப்பு பரிசுகளை மோடி அரசு வழங்கலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்த ஒரு ஊடக அறிக்கையின்படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை அரசு மீண்டும் அதிகரிக்கலாம். ஏனெனில் தொடர்ந்து இரண்டு மாதங்கள் சரிவுக்குப் பிறகு, மார்ச் 2022ல் ஏஐசிபிஐ குறியீடு உயர்ந்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதனால், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. அந்த வகையில் இம்முறையும் அகவிலைப்படி தொகை 3 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் ஆண்டுக்கு இருமுறை என்ற அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். அந்த வகையில் 2022 ஜனவரி மாதத்திற்கான DA தொகை 34% ஆக உயர்த்தப்பட்டு கடந்த மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வரும் ஜூலை மாதத்திலும் அரசு ஊழியர்களுக்கான DA அதிகரிப்பை காணும் என நம்பப்படுகிறது.
இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ் – சேமிப்பு கணக்கு வட்டி குறைப்பு!
இந்த சூழ்நிலையில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் வெளியான பிறகே, அகவிலைப்படி குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், அதில் ஒரு உயர்வு இருந்தால், ஜூலை மாதத்தில் அரசாங்கம் மற்றொரு DA அறிவிப்பை வெளியிடலாம். இப்போது வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் DA வழங்கப்படுகிறது. இப்போது மீண்டும் ஒருமுறை மத்திய அரசு 3 சதவீதம் DAவை உயர்த்தினால், அரசு ஊழியர்களின் மொத்த DA 37 சதவீதமாக உயரும். இது நடந்தால், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் நேரடி பலன்களைப் பெறுவார்கள்.