மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஓய்வூதியத் தொகை ரூ.1.25 லட்சம் வரை உயர்வு!
மத்திய அரசுத் துறையில் பணிபுரிந்து 7வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் தங்களது ஓய்வுகாலத்தில் ரூ.1.25 லட்சம் வரை பெறும் ஒரு ஜாக்பாட் அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் பார்ப்போம்.
ஓய்வூதியம் அதிகரிப்பு
மத்திய அரசு தனது 47 லட்சத்து 6 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் 6 லட்சத்து 72 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் மேல் சிறப்பு கவனம் செலுத்தி இருக்கிறது. அதாவது 7வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் சலுகைகளை அறிவித்துள்ளது. அதாவது கணவன் மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்து, மத்திய சிவில் சர்வீஸ் ஓய்வூதியம் (CHCS ஓய்வூதியம்) 1972க்கு தகுதி பெற்றிருந்தால், அவர்களது குடும்பம் மத்திய அரசின் குடும்ப ஓய்வூதியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதன் மூலம் இரண்டு உறுப்பினர்களும் ஓய்வு பெற்ற பிறகு இறந்துவிட்டால், அவர்களது குழந்தைகள் இரண்டு ஓய்வூதியங்களையும் பெறலாம். இதன் கீழ், அதிகபட்ச ஓய்வூதியமாக ரூ.1.25 லட்சம் வரை கிடைக்கும். இருப்பினும், இந்த ஊதியத்தை பெற்றுக்கொள்ள அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த வகையில் சிச்சிஸ் ஓய்வூதியச் சட்டம், 1972 இன் விதி 54 (11) இன் படி, கணவன் மற்றும் மனைவி இருவரும் ஓய்வூதிய விதிகளின் கீழ் இருந்தால், அவர்கள் இறந்த பிறகு, அவர்களது இரண்டு குழந்தைகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும்.
மே 7 முதல் மே 17 வரை முழு ஊரடங்கு அமல் – பிரதமர் அதிரடி உத்தரவு!
அதே போல அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒருவர் இறந்தால், குடும்ப ஓய்வூதியம் மற்றொரு உறுப்பினருக்கு (கணவன் அல்லது மனைவி) செல்கிறது. அதே நேரத்தில், இரு உறுப்பினர்களும் ஓய்வு பெற்ற பிறகு இறந்தால் அவர்களின் குழந்தை குடும்ப ஓய்வூதியத்தின் பலனைப் பெறுகிறது. அந்த வகையில், இப்போது ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் அதிகபட்ச ஓய்வூதியத் தொகை ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய குடும்ப ஓய்வூதிய விதிகளின்படி கணவன், மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்து பணி ஓய்வுக்குப் பின் இறந்தால் ஒரு ஓய்வூதியம் ரூ.1.25 லட்சம் எனவும், குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ.2.50 லட்சம் எனவும் அரசு நிர்ணயித்துள்ளது.